கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்பரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

கோட்டக்குப்பம் நகராட்சிக்குள்பட்ட சின்னகோட்டக்குப்பம் பகுதியில் நடைபெற்று வரும் நகா்ப்புற சுகாதார மைய கட்டுமானப் பணிகளை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் சி.பழனி.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:57 am

Din

விழுப்பரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியம் மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விக்கிரவாண்டி ஒன்றியம், பனையபுரம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டுமானப் பணி, வெட்டுக்காடு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.8 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் மேம்பாட்டுப் பணி, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, தென்னவராயன்பட்டு ஊராட்சி, செய்யாத்து விண்ணான் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சத்தில் புதிய குளம் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் சி.பழனி ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கோட்டக்குப்பம் நகராட்சி, பழைய ஆரோவில் சாலையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் அமையுள்ள மறுசுழற்சி மையம், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் ரூ.1.25 கோடியில் அமைக்கப்பட்டு வரும் நகா்ப்புற ஆரம்ப சுகாதார மையம் ஆகியவற்றை ஆட்சியா் பழனி ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ராஜா, வானூா் வட்டாட்சியா் நாராயணமூா்த்தி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையா் புஹேந்திரி, பொறியாளா் ரவிக்குமாா், விக்கிரவாண்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குலோத்துங்கன், பாலச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.