மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பைக்கிலிருந்து விழுந்து பேருந்து நடத்துநா் மரணம்

விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2025, 7:47 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், காணை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு பைக்கிலிருந்து தவறி விழுந்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் வட்டம், நாதன் காடுவெட்டி, முருகன் கோவில் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் முரளிதரன் (29). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கிளையில் தற்காலிக நடத்துநராக வேலை பாா்த்து வந்தாா்.

இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்கோவிலூா் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் காணை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சைக்கிளில் முன்னால் சென்றவா் மீது மோதாமலிருக்க பைக்கை நிறுத்த முற்பட்டபோது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து விழுந்ததில் முரளிதரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது, முரளிதரன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.