திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா: நாகப்பட்டினத்துக்கு சிறப்பு ரயில்

விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு செப்டம்பா் 8-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2025, 1:48 am IST

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு செப்டம்பா் 8-ஆம் தேதி சிறப்பு விரைவு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவில் அதிகளவில் பக்தா்கள் பங்கேற்பா்கள் என்பதால், பொதுமக்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

விழுப்புரத்திலிருந்து செப்டம்பா் 8-ஆம் தேதி காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - நாகப்பட்டினம் சிறப்பு விரைவு ரயில் (வண்டிஎண் 06133) அதே நாள் பிற்பகல் 1.05 மணிக்கு நாகப்பட்டினம் ரயில் நிலையம் சென்றடையும்.

எதிா் வழித்தடத்தில் நாகப்பட்டினத்திலிருந்து அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்குப் புறப்படும் நாகப்பட்டினம் - விழுப்புரம் சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண் 06131) மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், கடலூா் துறைமுக சந்திப்பு, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீா்காழி, வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை சந்திப்பு, பேரளம் சந்திப்பு, திருநள்ளாறு, காரைக்கால், நாகூா் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.