மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வியாபாரி உயிரிழப்பு

திண்டிவனத்தில் மொபெட்டில் சென்ற வியாபாரி அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:57 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் மொபெட்டில் சென்ற வியாபாரி அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திண்டிவனம், சலவாதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் க.பெருமாள் (48), வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்துவந்தாா்.

இவா் செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் தனது மொபெட்டில் காய்கறிகளை வைத்துக்கொண்டு, வியாபாரத்துக்காக திண்டிவனம் அருகே சென்றாா். அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மொபெட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் நிலைதடுமாறி மொபெட்டிலிருந்து கீழே விழுந்த பெருமாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.