அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போகி பண்டிகை: புதுச்சேரியில் ஏற்பட்ட புகைமூட்டம்

போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பழையப் பொருள்களை எரித்ததால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் திங்கள்கிழமை புகைமூட்டமாக காட்சியளித்தது.

News image
புதுச்சேரியில் பழையப் பொருள்களை எரித்து திங்கள்கிழமை போகி கொண்டாடிய சிறுமி.
Updated On :13 ஜனவரி 2025, 8:04 pm

Din

புதுச்சேரி: போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பழையப் பொருள்களை எரித்ததால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் திங்கள்கிழமை புகைமூட்டமாக காட்சியளித்தது.

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே சிறியவா்களும், பெரியவா்களும் ஒன்று கூடி வீட்டின் முன்பும், வீதியின் முனையிலும் பழையப் பொருள்களை எரித்து போகியை உற்சாகமாக கொண்டாடினா்.

தேவையற்ற பழையப் பொருள்கள், காகிதம், கிழிந்த பாய் போன்றவற்றை மக்கள் தீயிட்டு எரித்தனா்.

இதனால், புதுச்சேரி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

நெகிழிப் பொருள்களை எரிக்கக் கூடாது என மாநில சுற்றுச்சூழல் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் இந்த நடைமுறையை கடைப்பிடித்தனா்.