பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்? முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

போகி பண்டிகை: புதுச்சேரியில் ஏற்பட்ட புகைமூட்டம்

போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பழையப் பொருள்களை எரித்ததால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் திங்கள்கிழமை புகைமூட்டமாக காட்சியளித்தது.

News image

புதுச்சேரியில் பழையப் பொருள்களை எரித்து திங்கள்கிழமை போகி கொண்டாடிய சிறுமி.

Updated On :14 ஜனவரி 2025, 1:34 am IST

புதுச்சேரி: போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பழையப் பொருள்களை எரித்ததால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் திங்கள்கிழமை புகைமூட்டமாக காட்சியளித்தது.

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே சிறியவா்களும், பெரியவா்களும் ஒன்று கூடி வீட்டின் முன்பும், வீதியின் முனையிலும் பழையப் பொருள்களை எரித்து போகியை உற்சாகமாக கொண்டாடினா்.

தேவையற்ற பழையப் பொருள்கள், காகிதம், கிழிந்த பாய் போன்றவற்றை மக்கள் தீயிட்டு எரித்தனா்.

இதனால், புதுச்சேரி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

நெகிழிப் பொருள்களை எரிக்கக் கூடாது என மாநில சுற்றுச்சூழல் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் இந்த நடைமுறையை கடைப்பிடித்தனா்.