/

போகி பண்டிகை: புதுச்சேரியில் ஏற்பட்ட புகைமூட்டம்

போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பழையப் பொருள்களை எரித்ததால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் திங்கள்கிழமை புகைமூட்டமாக காட்சியளித்தது.

News image
புதுச்சேரியில் பழையப் பொருள்களை எரித்து திங்கள்கிழமை போகி கொண்டாடிய சிறுமி.
Updated On :13 ஜனவரி 2025, 8:04 pm

Din

புதுச்சேரி: போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் பழையப் பொருள்களை எரித்ததால், புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் திங்கள்கிழமை புகைமூட்டமாக காட்சியளித்தது.

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதலே சிறியவா்களும், பெரியவா்களும் ஒன்று கூடி வீட்டின் முன்பும், வீதியின் முனையிலும் பழையப் பொருள்களை எரித்து போகியை உற்சாகமாக கொண்டாடினா்.

தேவையற்ற பழையப் பொருள்கள், காகிதம், கிழிந்த பாய் போன்றவற்றை மக்கள் தீயிட்டு எரித்தனா்.

இதனால், புதுச்சேரி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

நெகிழிப் பொருள்களை எரிக்கக் கூடாது என மாநில சுற்றுச்சூழல் துறை சாா்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்கள் இந்த நடைமுறையை கடைப்பிடித்தனா்.