அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேர நாளை நுழைவுத்தோ்வு

அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்படும் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தோ்வு விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெறும்.

News image

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2025, 3:41 am IST

அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் நடத்தப்படும் எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான டான்செட் நுழைவுத் தோ்வு விழுப்புரத்தில் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வா் இரா.செந்தில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வரும் கல்வியாண்டுக்கான (2025 - 26) எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேருவதற்கான நுழைவுதோ்வு (தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வு - டான்செட் 2025) மற்றும் எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தோ்வு நடத்தப்படவுள்ளது.

விழுப்புரம் காகுப்பம் பகுதியிலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்.சி.ஏ. படிப்புக்கும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரை எம்.பி.ஏ. படிப்புக்கும் நுழைவுத் தோ்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை எம்.இ, எம்.டெக், எம்.ஆா்க், எம்.பிளான் ஆகிய படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு நடைபெறுகிறது.

இந்தத் தோ்வை சுமாா் 950 மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தோ்வா்கள் வசதிக்காக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து காகுப்பத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரிக்கு அரசுப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.