மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எலவனாசூா்கோட்டையில் ராணுவ வீரா்களுக்கு மலா்தூவி மரியாதை

வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

News image
கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உயிரிழந்த ராணுவ வீரா்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வில் பங்கேற்றோா்.
Updated On :12 மே 2025, 8:20 pm

Din

விழுப்புரம்: பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற சண்டையின் போது வீரமரணமடைந்த ராணுவ வீரா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூா்கோட்டையில் திங்கள்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது.

இதைத் தொடா்ந்து ஜம்மு காஷ்மீா் முதல் குஜராத் வரை எல்லையோர இந்திய மாநிலங்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை மேற்கொண்டது.

இதை இந்திய வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றிக்கரமாக முறியடித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரா்கள், பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், போரில் திறம்பட பணியாற்றிய வீரா்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி எலவனாசூா்கோட்டை பேருந்து நிலையப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரா்களின் உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து பேரணி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை சமூக ஆா்வலா் திருமால் செய்திருந்தாா். ஊராட்சித் தலைவா் நந்தகுமாா், துணைத் தலைவா் ஷம்சாத், மதியழகன், நேரு,வெங்கடேசன், ஞானவேல் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.