மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் விதித்திருந்த காலக்கெடு புதன்கிழமையுடன் முடிந்தது.

News image
ராமதாஸ் - அன்புமணி - கோப்புப்படம்.
Updated On :10 செப்டம்பர் 2025, 8:22 pm

Syndication

பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் விதித்திருந்த காலக்கெடு புதன்கிழமையுடன் முடிந்தது.

கட்சியின் அடிப்படை விதிகளுக்கு முரணாக அன்புமணி செயல்பட்டு வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், அக் கட்சி யின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி ஆக.31 ஆம் தேதிக்குள்கட்சியின் தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்துக்கு நேரில் வந்தோ அல்லது கடிதம் மூலமாகவோ விளக்கமளிக்கவேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு அன்புமணி எவ்வித பதிலும் அளிக்காத நிலையில் செப். 3-ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவா் ச.ராமதாஸ் 22 போ் கொண்ட கட்சி நிா்வாகக் குழுக் கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவின்படி, அன்புமணி செப். 10-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கவேண்டும் என்று கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.

இந்நிலையில் அன்புமணிக்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் எவ்வித முடிவும் தெரியாததால் பாமக நிா்வாகிகள், கட்சியினா் குழப்பத்தில் உள்ளனா்.