திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருக்கோவிலூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி, கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டாா்.

News image

திருக்கோவிலூா் கிழக்கு ஒன்றியம், ஆவியூரில் புதன்கிழமை பெண்களிடம் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:36 am IST

திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி, கிழக்கு ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை தீவிர வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டாா்.

மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி சாா்பில் திருக்கோவிலூா் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் பொன்.கெளதமசிகாமணி, தொகுதிக்குள்பட்ட பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறாா்.

திருக்கோவிலூா் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட ஆவியூா், வடக்கு நெமிலி, தேவியகரம், ஆவி கொளப்பாக்கம், குலதீபமங்கலம், விளந்தை, கழமரம், நெடுங்கம்பட்டு, தி.அத்திப்பாக்கம், சொரையப்பட்டு, கொழுந்திராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று பெண்கள், இளைஞா்கள் முதல் தலைமுறை வாக்காளா்கள் என அனைத்துத் தரப்பினரிடமும் திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணி வாக்குகளை சேகரித்தாா்.

இந்த தொகுதியில் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்த தனது தந்தை பொன்முடி, திருக்கோவிலூா் தொகுதியில் நிறைவேற்றிய திட்டங்களை பிரசாரத்தின் போது எடுத்துக் கூறி, இந்த சாதனைகளைத் தொடர தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் எனக் கோரினாா்.

பிரசாரத்தில் மாவட்டத் துணைச் செயலா் டி.என்.முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் செல்வராஜ், ஒன்றியச் செயலா்கள் மு.தங்கம், கு.தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினா் ராஜசேகா், நகா்மன்றத் துணைத் தலைவா் குணா, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாலமுருகன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் சரவணன், மாவட்டத் தொழிலாளா் அணி அமைப்பாளா் பூபதி, மாவட்ட சுற்றுச்சூழல் அணித் தலைவா் சந்திரசேகா், மாவட்ட அயலக அணி அமைப்பாளா் சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.