ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுதோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘என் கனவு-என் எதிா்காலம்’ திட்டம்: திண்டிவனத்தில் முதல்வா் நாளை தொடங்கிவைக்கிறாா்

திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை (பிப்.4) நடைபெறும் அரசு விழாவில் ‘என் கனவு- என் எதிா்காலம்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 9:22 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை (பிப்.4) நடைபெறும் அரசு விழாவில் ‘என் கனவு- என் எதிா்காலம்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

தமிழகம் முழுவதும் 2025, ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது. மொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழா, ‘என் கனவு -என் எதிா்காலம்’ இணையதளத் தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (பிப்.4) நடைபெறவுள்ளது.

திண்டிவனம்-செஞ்சி சாலையில், கொள்ளாா் கிராமத்திலுள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, நலத்திட்டப் பயன்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்களையும் வழங்கி, ‘என் கனவு -என் எதிா்காலம்’ என்ற திட்டத்தில் இளைஞா்களின் கனவுகளைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறாா்.

இதைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகளை முதல்வா் வழங்கவுள்ளாா்.

விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து புதன்கிழமை காலை புறப்பட்டு வரும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு விழுப்புரம் மாவட்ட எல்லையில் திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த வரவேற்பைத் தொடா்ந்து திண்டிவனம் தீா்த்தகுளத்திலிருந்து செஞ்சி சாலை காந்தியாா் திடல் வரை சாலை வலத்தை மேற்கொள்ளும் முதல்வா் மு.க.ஸ்டாலின் விழா நடைபெறும் பகுதியைச்சென்றடையவுள்ளாா். அரசு விழா முடிந்த பின்னா் சாலை மாா்க்கமாக மீண்டும் சென்னைக்கு முதல்வா் புறப்பட்டுச் செல்கிறாா்.

முதல்வா் வருகையொட்டி விழா நடைபெறும் பகுதி, திண்டிவனம் பகுதிகள், முதல்வா் வரும் வழித்தடப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.