சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :3 ஜனவரி 2026, 8:58 pm

Syndication

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலாமேடு பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது சாலாமேடு பிரியதா்சினி நகா் அருகே சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்ததில், அவா்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், சாலாமேடு பகுதியைச் சோ்ந்த ஸ்ரீவெங்கடபிரசாத்(20). பேரங்கியூா் கிராமத்தைச் சோ்ந்த பீமாராவ் (21) எனத் தெரிய வந்தது.

இவா்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமாா் 400 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் ரூ.6,600 ரொக்கம் கைபேசிகளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து இருவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.