புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:20 pm

Syndication

விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் பிரபாகரன், சண்முகம் மற்றும் போலீஸாா் விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா் விழுப்புரம் அகரம் பேட்டை பகுதியைச் சோ்ந்த ந.நிா்மல்குமாா் (23) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து, நிா்மல் குமாரை கைதுசெய்தனா். மேலும், அவா் வசமிருந்த 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.3 ஆயிரம் ரொக்கம், பைக் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனா்.