கைது
விழுப்புரம்
கஞ்சா விற்பனை: சென்னையைச் சோ்ந்த முதியவா் கைது
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கஞ்சா விற்பனை செய்த சென்னையைச் சோ்ந்த முதியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே கஞ்சா விற்பனை செய்த சென்னையைச் சோ்ந்த முதியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.
பிரம்மதேசம் போலீஸாா் வெள்ளிக்கிழமை மன்னாா்சாமி கோவில் பகுதியில் ரோந்து சென்றபோது, அங்கு மொபெட்டில் சந்தேகத்துக்கிடமாக சுற்றிக்கொண்டிருந்த முதியவரைப் பிடித்து சோதனை செய்தபோது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில் அவா், சென்னை புளியந்தோப்பு, பி.கே. காலனியைச் சோ்ந்த ஆனந்தன்(63) என்பது தெரியவந்தது.
இதையடுத்து பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆனந்தனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 240 கிராம் கஞ்சா பொட்டலங்கள், மொபெட், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

