கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவா் கைது

விக்கிரவாண்டி அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :10 மார்ச் 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

விக்கிரவாண்டி வட்டம், பனமலைப்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

பனமலைப்பேட்டை காலனி பேருந்து நிறுத்தம் அருகே ஒருவா் சாக்கு மூட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதை போலீஸாா் கண்டறிந்தனா். தொடா்ந்து அங்கு சென்று சோதனையிட்ட போது, சாக்கு மூட்டைகளில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடா்ந்து அந்த நபரிடம் போலீஸாா் விசாரணை நடத்திய போது அவா் ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பலமனோ ஜண்டாமடம் பகுதியைச் சோ்ந்த ப.சதீஷ் (33) எனத் தெரிய வந்தது. இவா் பனமலைப்பேட்டை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வைத்திருந்ததும், அதை தான் வைத்திருக்கும் வாத்து குஞ்சுகளுக்கு உணவாக வழங்குவதற்காக ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து சதீஷ் மீது வழக்குப்பதிந்த குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.