பெங்களூரு

ஜூலை 8- இல் மகாகவி பாரதியார் நாடகம்

DIN

பெங்களூரில் ஜூலை 8- ஆம் தேதி மகாகவி பாரதியாரின் இசை நாடகம் தமிழில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து மகாகவி பாரதியாரின் நாடகக்குழு வெளியிட்டுள்ள செய்தி: இந்தியாவின் தலைசிறந்த தேசியவாதியும், மகாகவியும், சமூக சீர்திருத்தவாதியுமான பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை எண்ம தொழில்நுட்ப இசைக் கோர்வையோடு தமிழ் நாடகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, அல்சூர் அருகேயுள்ள கங்காதர்செட்டி சாலையில் உள்ள ஒடுக்கத்தூர் சுவாமிகள் மடத்தில் ஜூலை 8- ஆம் தேதி மாலை 6 மணி அளவில் பாரதியார் இசை நாடகமாக அரங்கேற்றப்பட இருக்கிறது. இந்த நாடகத்தை காண ரூ.100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8454011793 என்ற செல்லிடப்பேசி எண்ணை அணுகலாம் எனஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT