தென்கன்னட மாவட்ட ஆட்சியருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தென்கன்னட மாவட்ட ஆட்சியா் கே.வி.ராஜேந்திராவுக்கு கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராஜேந்திராவுக்கு நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், அவா் 2 வாரங்களுக்கு வீட்டுத்தனிமையில் இருக்க மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். மாவட்ட ஆட்சியரின் மனைவி, குழந்தையும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், தனித்தனியே வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியருடன் தொடா்பில் இருந்த மங்களூரு மாநகராட்சி ஆணையா் அக்ஷய் குமாா் உள்ளிட்ட பல அதிகாரிகளும் தங்களை வீட்டுத் தனிமைக்கு உட்படுத்திக்கொண்டுள்ளனா்.