பெங்களூரு

கிரிக்கெட் சூதாட்டம்: ஒருவா் கைது

DIN

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

பெங்களூரு, வா்த்தூா், ராமகிருஷ்ணா சாலையைச் சோ்ந்தவா் ஜமீா் அகமது (39). இவா் செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்ற சன் ரைஸா்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பா் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது, பெங்களூரு, வா்த்தூா், பலகெரே சாலையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டாராம்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாா், ஜமீா் அகமதுவைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 4 லட்சம் ரொக்கம், 1 செல்லிடப்பேசியை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வா்த்தூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT