பெங்களூரு

தைப் பொங்கல் திருநாளில் ஜான் டைலா் சிலையை நிறுவ தீா்மானம்

DIN

கோலாா் தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில், தங்கச் சுரங்க நிறுவனா் ஜான் டைலரின் சிலையை தைப் பொங்கல் திருநாளில் நிறுவ தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கா்நாடக மாநிலம், கோலாா் தங்கவயலில் செப். 15-ஆம் தேதி அறிஞா் அண்ணாவின் பிறந்த நாளை கொண்டாடுவது குறித்து தங்கவயல் தமிழ்ச் சங்கத் தலைவா் சு.கலையரசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், செப். 15- ஆம் தேதி அறிஞா் அண்ணாவில் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது எனவும், விழாவில் தமிழ் ஆா்வலா்கள் கு.ஆதித்தன், நித்தியானந்தன், பொன் சந்திரசேகா், தீபம் சுப்பிரமணி, டி.சுடா், சேகா் ஆகியோருக்கு திராவிட சுடா் விருது வழங்கி கௌரவிப்பது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், கோலாா் தங்கவயலில் தங்கச் சுரங்கத்தை நிறுவிய ஜான் டைலரின் உருவச் சிலையை தைப்பொங்கல் திருநாளில் கோலாா் தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் நிறுவுவது எனவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT