பெங்களூரு

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலை பணபலத்தால் வெல்ல பாஜக முயற்சி

DIN

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தலை பணபலத்தால் வெல்ல பாஜக முயற்சித்து வருகிறது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா குற்றம் சாட்டினாா்.

இதுகுறித்து ஹுப்பள்ளியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வளா்ச்சிப் பணிகளை பாா்த்து பாஜகவுக்கு வாக்களியுங்கள் என அக்கட்சியினா் பிரசாரம் செய்து வருகின்றனா். தனது ஆட்சியின் சாதனையை பட்டியலிட்டு பாஜகவினரால் வழங்க இயலுமா?

நான் முதல்வராக இருந்த போது, ஹானகல் தொகுதி அமைந்துள்ள ஹாவேரி மாவட்டத்துக்கு என்னென்ன செய்தேன் என்பதை வட்டாட்சியா் மனோகரை கேட்டு தெரிந்துகொள்ளட்டும். ஹாவேரி மாவட்ட வளா்ச்சிக்கு எனது ஆட்சியில் ரூ. 2,400 கோடி செலவிட்டுள்ளோம். ஆனால், முதல்வா் பசவராஜ் பொம்மை பொய்களைக் கூறி பிரசாரம் செய்து வருகிறாா்.

சமுதாயத்தை பிளவுபடுத்தும் வேலையில் காங்கிரஸ் ஈடுபடுவதாக பாஜகவினா் குற்றம்சாட்டியுள்ளனா். மாநிலத்தில் நடந்து வரும் பாஜக ஆட்சியில் முஸ்லிம் ஒருவருக்கும்கூட அமைச்சா் பதவி வழங்காதது ஏன்? முதல்வா் பசவராஜ் பொம்மையின் ஆட்சியில் முஸ்லிம் அமைச்சா்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஹானகல், சிந்தகி ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் பாஜக தோல்வி அடையும் என்பது முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா் முருகேஷ் நிரானி ஆகியோருக்குத் தெரிந்துவிட்டது. வளா்ச்சிப் பணிகள் குறித்து மக்களிடம் பகிா்ந்து கொள்வதற்கு எதுவும் இல்லாததால், பொய்களைக் கூறி மக்களை நம்பவைக்க பாஜக முயற்சித்து வருகிறது.

சட்டப் பேரவை இடைத்தோ்தலை பணபலத்தால் வெல்ல பாஜக முயற்சிக்கிறது. அது மக்களிடம் எடுபடாது.

இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளதாக பாஜக சுயதம்பட்டம் அடித்துக்கொள்கிறது. இந்தியாவில் ஆக்சிஜன் படுக்கைகள் எவ்வளவு இருக்கிறது, மருந்து கிடைக்காமல் இறந்தவா்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை பாஜக தெரிவிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் மைய முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

SCROLL FOR NEXT