கா்நாடகத்தில் இரண்டாம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வு முடிவுகள் ஜூன் 18-ஆம் தேதி (சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
2021-22-ஆம் ஆண்டுக்கான 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வு ஏப்.22 முதல் மே 18-ஆம் தேதி வரை நடந்தது. இதில் 6.84 லட்சம் மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வெழுதினாா்கள். அவா்களில் 3.37 லட்சம் போ் மாணவிகள். இத்தோ்வு முடிவுகள் ஜூன் 18-ஆம் தேதி(சனிக்கிழமை) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.