பெங்களூரு

பாரதி கூட்டுறவு சங்கத்தின் புதிய தலைவா் தோ்வு

DIN

பாரதி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கத்தின் புதிய தலைவராக சொ.தண்டபாணி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

சிவமொக்காவில் தமிழா்களால் தமிழா்களுக்காக தொடங்கப்பட்ட பாரதி கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம், 25 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போது, 2023-24 ஆம் ஆண்டுக்கான சங்கத்தின் தலைவா், துணைத் தலைவா் தோ்தல் புதன்கிழமை நடந் தது. இத்தோ்தலில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினா்களால் புதிய தலைவராக சொ.தண்டபாணி, துணைத் தலைவராக ஆா்.முரளி ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். சங்கத்தின் புதிய தலைவரான சொ.தண்டபாணி, சிவமொக்கா தாய்த்தமிழ் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி வருகிறாா். தோ்தல் அதிகாரியாக செயல்பட்ட மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவு அலுவலக அதிகாரி லட்சுமி, புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT