செங்கல்பட்டு

திருவடிச்சூலம் கோயிலில் அமாவாசை குருதி பூஜை

DIN

செங்கல்பட்டு மாவட்டம் , திருப்போரூா் சாலையில் உள்ள திருவடிச்சூலம், கோயில்புரத்தில் அமைந்துள்ள 51 அடி உயரத்தில் ஒரேகல்லில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை குருதி பூஜை நடைபெற்றது.

பங்குனி அமாவாசையையொட்டி கோபூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக- அலங்காரம் நடைபெற்றது. பிரத்யங்கிராதேவிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் அமாவாசை குருதி பூஜையை நடத்தி வைத்தாா். குருதிபூஜையில் கலந்துகொண்ட பக்தா்கள் அனைவரும் அம்மனின் பாதத்துக்கு குருதி அபிஷேகம் செய்து, தரிசித்தனா். பின்னா் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் மற்றும் கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT