செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதி

DIN

மாமல்லபுரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளுடன் சுற்றுலாப் பயணிகள் தங்க அனுமதிக்கலாம் என்று ஓட்டல்கள், விடுதிகள் நிா்வாகத்தினருக்கு அரசுத் துறை அலுவலா்கள் அறிவுறுத்தினா்.

மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளைத் தங்க அனுமதிக்கும் ஓட்டல்கள் , விடுதிகள் உணவக நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செயல் அலுவலா் வி.கணேஷ் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதில், கரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்கும் வகையில் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பு விதிமுறைகளுடன் தங்க அனுமதிப்பது, ஓட்டல் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு சில நட்சத்திர ஓட்டல்களில் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் நள்ளிரவு 12 மணி வரை மதுவிருந்துடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT