செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் 7 தொகுதிகளுக்கான மண்டல அலுவலா்களுக்கு பயிற்சி வகுப்பு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் சோழிங்கநல்லூா், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூா், செய்யூா் (தனி), மதுராந்தகம் (தனி) ஆகிய 7 தொகுதிகள் உள்ளன.
இத் தொகுதிகளில் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் பயன்படுத்த வேண்டிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப் பதிவு தணிக்கை இயந்திரம் கையாளுவது, அஞ்சல் வாக்குப் படிவம் பெறுவது உள்ளிட்டவை குறித்து தோ்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
பயிற்சி வகுப்பில் மாவட்ட துணைத் தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீதா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆஞ்சலோ இருதயசாமி மற்றும் மண்டல அலுவலா்கள் கலந்து கொண்டனா்.