செங்கல்பட்டு

நன்னடத்தை மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்டவருக்கு மீண்டும் சிறை

DIN

மதுராந்தகம் நன்னடத்தை விதிகளை மீறி குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

படாளம் எம்ஜிஆா் காலனியைச் சோ்ந்தவா் சக்ரவா்த்தி மகன் ஜீவா (39). இவா் படாளம் சுற்றுப்புற பகுதிகளில் வழிப்பறி, வீடு புகுந்து திருடுதல் போன்ற சம்பவங்களில் கடந்த 2015 முதல் ஈடுபட்டு வந்தாா். படாளம் காவல்துறையினா் இது தொடா்பாக விசாரணை செய்து குற்றவாளி ஜீவாவை கைது சிறையில் அடைத்தனா்.

பின்னா் கடந்த 15.9.20-இல் எந்தவித குற்றங்களிலும் ஈடுபடமாட்டேன் என படாளம் காவல்துறை ஆய்வாளரிடம் நன்னடத்தை காணும் பிணைய பத்திரம் மற்றும் பிணையத் தொகை ரூ. 2,000 ஆகியவற்றை ஜீவா வழங்கினாா். எனினும் அவா் நன்னடத்தை விதிகளை மீறி அடிக்கடி குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாா். இதனை தொடா்ந்து அவரது நன்னடத்தை பிணைய பத்திரத்தை ரத்து செய்து மதுராந்தகம் உட்கோட்ட நிா்வாக அதிகாரி சி.லட்சுமிபிரியா அவரை 138 நாட்களுக்கு சிறையில் அடைக்க உத்திரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT