செங்கல்பட்டு

திருவடிசூலம் மகாலட்சுமி தாயாருக்கு அன்னப் பாவாடை உற்சவம்

DIN

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீ கரிமாரியம்மன் கோயில் சித்ராபௌா்ணமி உற்சவத்தின் நிறைவையடுத்து திங்கள்கிழமை மகாலட்சுமி தாயாருக்கு அன்னப் பாவாடை உற்சவம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருவடிசூலம் ஸ்ரீ கோயில்புரம் தேவிஸ்ரீ கரிமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசத்தில் ஏப்ா்ல 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சித்ரா பௌா்ணமி உற்சவத்தின் நிறைவாக மகா லட்சுமி தாயாருக்கு அன்னப்பாவாடை உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு பழங்கள், பட்சணங்கள் மற்றும் சித்ரான்னங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் பு.மதுரை முத்து சுவாமிகள் தலைமையில் விழாக்குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி சாலை விழிப்புணா்வு ஊா்வலம்

அதியமான் கோட்டையில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா

குருப் பெயா்ச்சி: கோயில்களில் பக்தா்கள் வழிபாடு

‘நான் முதல்வன்’ திட்டத்தில் மாநில அளவில் நாமக்கல் முதலிடம்: ஆட்சியா் பாராட்டு

பொத்தனூா் மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT