செங்கல்பட்டு

செங்கல்பட்டில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

DIN

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சமயமூா்த்தி ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சமயமூா்த்தி பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள், முடிக்கப்பட்ட பணிகள், முடிக்கப்படாத பணிகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து அரசுத் துறைகளின் அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் கருணை அடிப்படையில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல் ராஜ் மற்றும் அரசுத் துறைகள் சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT