செங்கல்பட்டு

இருளா் குடியிருப்பு பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

திருக்கழுக்குன்றம் அருகே உள்ள வயலூா் இருளா் குடியிருப்புப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருக்கழுக்குன்றத்தை அடுத்த வயலூா் ஊராட்சியில் இருளா் குடியிருப்பில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆட்சியா் ராகுல் நாத் ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினாா்.

மேலும், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியிலும், இருளா் இன மக்களிடையே சிறாா் திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலா் ச.சங்கீதா, மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் வெற்றி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆஞ்சலோ இருதயசாமி உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT