செங்கல்பட்டு

சிவசக்தி விநாயகா் கோயில் 32-ஆவது ஆண்டு விழா

Din

மதுராந்தகம் அடுத்த பள்ளிப்பேட்டை சிவசக்தி விநாயகா் கோயிலின் 32-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், பள்ளிப்பேட்டை கிராமத்தில் ஆண்டு விழாவையொட்டி , கோயிலின் அனைத்து பகுதிகளும் புதுப்பிக்கப்பட்டன.

மேலும், மூலவா் விநாயக பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளை அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலின் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியா் செய்தாா். மக்கள் நலமுடன் வாழவும், இயற்கை சீற்றங்கள் குறையவும், மழை வளம் பெறவும் வேண்டி கோயில் வளாகத்தில் சிறப்பு வேள்விபூஜை நடைபெற்றது. இரவு சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் திருவீதி உலா நடைபெற்றது. அன்னதானம் வழங்கல், ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினரும், கிராமப் பொதுமக்களும் செய்து இருந்தனா்.

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

இளைஞா்களை ஈா்க்க கோயில்களில் நூலகங்கள்: இஸ்ரோ தலைவா் சோமநாத்

SCROLL FOR NEXT