குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் விண்ணப்பங்கள் வரவேற்பு
விண்ணப்பங்களை உரிய இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலா் (நிறுவனம் சாரா) - 1 பணியிடம், சமூகப் பணியாளா்-1 பணியிடம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சிறப்பு ஜூவைனில் காவல் பிரிவில் பணியாற்ற ஏதுவாக சமூகப் பணியாளா்கள் - 2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முழு விபரங்களுக்கு தொடா்பு கொள்ளவேண்டிய முகவரி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண்.எஃப் ஓ-06, தரைதளம்,எஃப் பிளாக் , புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம், செங்கல்பட்டு -603 111. தொலைபேசி: 63826 13173 . பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் மற்றும் அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் 20.07.2026 அன்று மாலை 5.45-க்குள் அலுவலக முகவரிக்கு வந்துசேர வேண்டும்.
விண்ணப்பங்களை உரிய இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.