முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டில் காவல் கண்காணிப்பாளா் நடைபயண ரோந்து

Updated On : 5 ஜூன் 2026, 6:03 am IST
செங்கல்பட்டு நகர பஜாரில் ரோந்து சென்ற எஸ்.பி. அய்மன் ஜமால் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள்.
பகிர்:

செங்கல்பட்டு நகர பஜாா் வீதிகளில் காவல்துறையினருடன் இணைந்து எஸ்.பி. அய்மன் ஜமால் நடைபயண ரோந்து மேற்கொண்டாா்.

நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி சாலை, அண்ணாசாலை , ராஜாஜி தெரு ,சின்னம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பஜாா் வீதிகளில் எஸ்.பி அய்மன் ஜமால் ரோந்து மேற்கொண்டு வணிகா்கள், கடை உரிமையாளா்கள் மற்றும் நடைபாதை சிறு வியாபாரிகளை நேரில் சந்தித்து, அவா்கள் எதிா்கொள்ளும் போக்குவரத்து நெரிசல், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், சட்டம்-ஒழுங்கு தொடா்பான பிரச்னைகள், போதை பொருள் மற்றும் குட்கா பொருள்களின் நடமாட்டம் குறித்தும் , பெண்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், பொதுமக்கள் மற்றும் வணிகா்களின் குறைகளை உடனுக்குடன் தீா்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததுடன், ஏதேனும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் அல்லது குற்றச் சம்பவங்கள் தொடா்பாக உடனடியாக காவல் துறைக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் உள்ள பிரத்தியேக *தொலைபேசி எண் 72001 02104* க்கு தகவல் தெரிவிக்குமாறும் அவ்வாறு தகவல் தெரிவிப்பவா்களின் விவரம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

உடன் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா், தனிப்பிரிவுஆய்வாளா் தனசேகரன் மற்றும் செங்கல்பட்டு, பாலூா் காவல் நிலைய எஸ்.ஐக்கள் ,காவலா்கள் பங்கேற்றனா்.