பொருளாதாரத்தில் பின்தங்கிய சென்னை ஐஐடி மாணவர்கள் 5 பேருக்கு ஹிமாச்சல் தகவல் தொடர்பு தனியார் நிறுவனம் ( ஹெச்.எஃப்.சி.எல்.) கல்வி உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி: பொருளாதாரத்தில் பின்தங்கிய சென்னை ஐஐடி மாணவர்கள் 5 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ. 3 லட்சம் வீதம், 4 ஆண்டுகளுக்கு ரூ. 60 லட்சம் கல்வி உதவித் தொகையை வழங்க ஹெச்.எஃப்.சி.எல். நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.
இளநிலை பட்டப் படிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்களின் கல்வி, நிதிப் பற்றாக்குறையால் தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் , சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் இதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது.