முகப்பு
சென்னை

மெரீனா கடலில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம்

சென்னை மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On : 9 அக்டோபர் 2018, 4:19 am IST
பகிர்:


சென்னை மெரீனா கடற்கரையில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெரீனா கடற்கரையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையின் பின்புறம் திங்கள்கிழமை காலை 20 வயது மதிக்கத்தக்க இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது. இதைப் பார்த்த பொதுமக்கள், மெரீனா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸார் இளைஞர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.