முகப்பு
வணிகம்

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு

பருத்தி இறக்குமதிக்கு தற்காலிக சுங்க வரி விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பற்றி...

Updated On : 30 மே 2026, 10:15 pm IST
பருத்தி - ANI
பகிர்:

புது தில்லி : பருத்தி இறக்குமதிக்கு தற்காலிக சுங்க வரி விலக்கு அளித்து மத்திய அரசு சனிக்கிழமை (மே 30) உத்தரவிட்டது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஜவுளித் துறைக்கு பருத்தி கிடைப்பதை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு 2026 ஜூன் 1 முதல் 2026 அக்டோபர் 31 வரை பருத்தி இறக்குமதி மீதான அனைத்து சுங்க வரிகளுக்கும் தற்காலிக விலக்கு அளித்துள்ளது.

சந்தையில் பருத்தி கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், உள்நாட்டு ஜவுளித் தொழில்துறையின், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்திறனில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை அமையும் என்று அரசால் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

தற்காலிக வரி விலக்கு நடவடிக்கை ஜவுளி மற்றும் ஆடைத் துறை முழுவதும் உள்ளீட்டு செலவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு இலக்கு நிவாரணம் கிடைக்கும், அதே நேரத்தில் உள்நாட்டு விவசாயிகளின் நலன்களையும் கருத்தில் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

Govt exempts import duty on cotton for five months till October 30, 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.