நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அஞ்சலி...
சென்னை : நடிகர் அஜித் குமாரின் தாயாரது உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சனிக்கிழமை (மே 30) இரவில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பின் காரணமாக இன்று (மே 30) காலை காலமானார். அன்னாரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்த அஜித் குமார் இன்றிரவில் தாயகம் திரும்பி வீட்டுக்குச் சென்றடைந்துள்ளார். இந்த நிலையில், சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குடும்பத்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மோகினி மணி உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
Advertisement
Advertisement
summary