சென்னை

ரூ. 87 லட்சம் தங்கம் பறிமுதல்: பெண் கைது

DIN


சென்னை விமான நிலையத்தில் ரூ.87 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்ட ஒரு பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 
இதுகுறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சென்னை விமான நிலையத்துக்கு துபையில் இருந்து வந்த ரபியா, வெள்ளை நயினா முகமது, ரஹ்மத் அலி, ஷேக் முகமது, சிவச்சந்திரன் ஆகியோரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ரபியாவின் உடைமையில் இருந்து 595 கிராம் தங்கத்தையும், மீதமுள்ள நால்வரின்  மலக்குடலில் மறைத்து வைத்திருந்த 1.35 கிலோ எடையுள்ள தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
இதேபோல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனையில் ரியாத்தில் இருந்து வந்த தமிர் என்பவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், 100 கிராம் தங்கம் சிக்கியது.  இதன்மூலம் மொத்தம் ரூ.87.6 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  ரபியா கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT