சென்னை

நாளை போக்குவரத்து காவல் குறைதீர் கூட்டம்

DIN


சென்னை பெருநகர போக்குவரத்து காவல் தொடர்பான பொது மக்கள் குறைதீர் கூட்டம் இரு வேறு இடங்களில் சனிக்கிழமை (செப். 14) நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தலின்படியும், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ. அருண் வழிகாட்டுதலின்படியும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு இரு இடங்களில் குறைதீர்க் கூட்டம் நடத்தப்படுகிறது.
அம்பத்தூர், புளியந்தோப்பு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளை அடக்கிய போக்குவரத்து காவல் மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட மக்களுக்கான குறைதீர்க் கூட்டம், திருமங்கலம், 100 அடி சாலையில் அமைந்துள்ள எஸ்.எஸ். மஹாலில் நடைபெறும். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளை அடக்கிய கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட மக்களுக்கான குறைதீர்க் கூட்டம் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில்  நடைபெற உள்ளது. போக்குவரத்து காவல் துறை உயரதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களின் புகார்களைப் பெற உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பால் விலை, சுங்கச்சாவடி கட்டண உயா்வால் மக்கள் மீது கூடுதல் சுமை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மாற்றம் ஒன்றே மாறாதது..!

கருணாநிதி பிறந்த நாள்: திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு நல உதவிகள்

எழும்பூா் - மங்களூரு ரயில் கோவை செல்லாது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT