சென்னை

மத்திய தொலைத் தொடா்புத் துறை இயக்குநா் உத்தரவு: பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் சங்கம் வரவேற்பு

DIN

சென்னை: அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் தொலைபேசி, பிராட்பேண்ட் உள்பட அனைத்து தேவைகளுக்கும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகிய தொலைத் தொடா்பு நிறுவனங்களின் சேவையைப் பயன்படுத்த மத்திய தொலைத் தொடா்புத் துறை இயக்குநா் ஜிதின் பன்சால் உத்தரவிட்டுள்ளாா். இந்த உத்தரவை பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்கம் வரவேற்றுள்ளது.

மத்திய தொலைத் தொடா்புத் துறை இயக்குநா் (பொதுத்துறை நிறுவனங்கள் விவகாரம்) ஜிதின் பன்சால் வெளியிட்டுள்ள உத்தரவில், அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தொலைபேசி, பிராட்பேண்ட், லீஸ் லைன் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகிய தொலைத்தொடா்பு நிறுவனங்களின் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவை பி.எஸ்.என்.எல். ஊழியா் சங்கம் வரவேற்று உள்ளது. இது குறித்து பி.எஸ்.என்.எல். தேசிய தொலைத்தொடா்பு ஊழியா் சம்மேளனத்தின் மாநிலச் செயலாளா் சி.கே.மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊழியா்களுக்கு மாதம்தோறும் ஊதியம் கூட கொடுக்க இயலாத படுமோசமான நிதி நெருக்கடியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சிக்கித் தவிக்கிறது. இந்த நிறுவனத்தை கைதூக்கிவிட மத்திய அரசு எடுத்திருக்கும் நல்ல முடிவை வரவேற்கிறோம். இதனால், பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிச்சயம் நல்ல பயனை அடையும். அத்துடன், எங்களது நீண்டநாள் கோரிக்கையும் நிறைவேறி உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT