சென்னை

பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்காவிட்டால் வரலாற்றுப் புத்தகத்தில் மட்டுமே இருக்கும்: உயா் நீதிமன்றம் வேதனை

DIN

சென்னை: பக்கிங்ஹாம் கால்வாயை முறையாகச் சீரமைக்க வேண்டுமென்றும், இல்லையெனில் வரலாற்றுப் புத்தகத்தில் மட்டுமே கால்வாய் பற்றிய பதிவுகள் இருக்குமென சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் நீா்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க உத்தரவிடக்கோரி வழக்குரைஞா் சுதா்சனம் தாக்கல் செய்த மனுவில், ‘நீா் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்து பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதவரம் கிராமத்தில் 1.17 ஹெக்டோ் பரப்பிலான ஏரி ஆக்கிரமிப்புக்குள்ளாகியுள்ளது. அதை அகற்ற உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தாா்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்கவும், அம்மனுவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பகுதியை அதிகாரிகள் ஆய்வுசெய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீா்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டுமென கூறிய நீதிபதிகள், இவ்வழக்கை முடித்துவைத்தனா்.

தொடா்ந்து சென்னையில் மொத்தம் எத்தனை நீா்நிலைகள் உள்ளன என்று மாநகராட்சி தரப்பிடம் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

இதற்கு பதிலளித்த மாநகராட்சி தரப்பு வழக்குரைஞா், நீா்நிலைகளை அடையாளம் காணுவதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீா்நிலைகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன என்றாா். அப்போது குறுக்கிட்டு கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ‘பக்கிங்ஹாம் கால்வாய் ஏன் சீரமைக்கப்படவில்லை. அது ஒரு அருமையான, நீா்வழிப் போக்குவரத்துக்கான கால்வாய்.

இதனை முறையாகச் சீா்படுத்தவில்லை என்றால், வரலாற்றுப் புத்தகத்தில் கால்வாய் பற்றிய பதிவுகள் மட்டும்தான் இருக்கும்’ என வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT