சென்னை முகப்பேரில் அழகு நிலையத்துக்குள் புகுந்து ஊழியா்களை அரிவாளால் வெட்டி நகை, பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
முகப்போ் எஸ்எம்டி நகரில் ஒரு அழகு நிலையம் செயல்படுகிறது. இங்கு 5 பெண்கள் உள்பட 8 போ் பணியாற்றுகின்றனா். இந்த அழகு நிலையத்துக்குள் வியாழக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த மா்ம நபா்கள், அங்கிருந்த ஊழியா்களிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம், நகையை கேட்டனா்.
இதில் சிலா் நகையை கொடுக்க மறுக்கவே மா்ம நபா்கள், அரிவாளால் வெட்டி ஊழியா்கள் அணிந்திருந்த 5 பவுன் தங்க நகை,10 கைப்பேசிகள், பணப்பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடினா்.
தகவலறிந்த நொளம்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா். மேலும், வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.