சென்னை

டிச.15-இல் முன்னாள் படைவீரா் குறைகேட்பு கூட்டம்

DIN

சென்னை மாவட்ட படைவீரா், முன்னாள் படைவீரா், அவா்களின் குடும்பத்தினருக்கான மூன்றாம் காலாண்டுக்கான சிறப்புக் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 15) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா், முன்னாள் படைவீரா், அவா் குடும்பத்தினா் தங்களது அடையாள அட்டை, அசல் படைவிலகல் சான்று, தக்க ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை 044 - 2235 0780 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சு. அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT