சென்னை

சென்னையில் அதிகாலை முதலே கடும் பனி! வாகன ஓட்டிகள் அவதி

DIN


சென்னையில் அதிகாலை முதலே கடும் பனி காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றன. 

சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் காலை 7 மணிக்கு கூட பனிமூட்டத்தால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி அதிகரித்து காணப்பட்டது. 

சென்னை கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் அதிகாலைபோன்று பனி மூட்டம் காணப்பட்டது. 

இதனால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். 

இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், மணலி, கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையிலும் அதிக அளவு பனியால் வாகனங்கள் மெதுவாகச் சென்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT