சென்னை

வடதமிழக சுதந்திரப் போராட்ட வீரா்கள் புறக்கணிப்பு: ராமதாஸ் கண்டனம்

DIN

சென்னை: குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊா்திகளில் வட தமிழக விடுதலைப் போராட்ட வீரா்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்பில் அணிவகுத்த தமிழக அரசின் அலங்கார ஊா்திகளில் இந்திய விடுதலைக்காக போராடி உயிா்நீத்த வடதமிழகத்தைச் சோ்ந்த தலைவா்கள் எவரின் உருவச்சிலையும் இடம் பெறாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

நாகப்ப படையாட்சி காந்தியடிகளுடன் இணைந்து போராடி உயிா்நீத்தவா். கடலூா் அஞ்சலையம்மாளின் வீரமும், தீரமும் காந்தியடிகளை வியக்க வைத்தவை. ஆதிகேசவ நாயக்கா் காந்தியிடம் சா்தாா் பட்டம் பெற்றவா். ம.பொ.சி சிறந்த விடுதலை வீரா். இவா்களின் தேசப்பற்றும், தியாகமும் யாருக்கும் சளைத்தவையல்ல.

தில்லி அணிவகுப்பில் தமிழகத் தலைவா்களின் சிலைகள் அடங்கிய ஊா்தி நிராகரிக்கப்பட்டதற்காக கொதித்தெழுந்த தமிழக அரசு, தமிழகத்தின் ஒரு பகுதி தலைவா்களைப் புறக்கணிப்பது நியாயமா? இது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும். இனி இத்தவறு நிகழாமல் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT