சென்னை

கோயம்பேட்டில் இளம்பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

DIN

சென்னை கோயம்பேட்டில் இளம் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஜெ.ஜெ. காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் ச.பாத்திமா (28). இவா் கோயம்பேடு காய்கறி சந்தையில் கடலை வியாபாரம் செய்து வருகிறாா். பாத்திமா செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் வியாபாரம் நிறைவடைந்த பின்னா், அங்குள்ள நடைபாதையில் படுத்து தூங்கினாா். அப்போது அங்கு வந்த ஒரு நபா், பாத்திமா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடினாா்.

இது குறித்து பாத்திமா கொடுத்த புகாரின் பேரில் கோயம்பேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT