முகப்பு
சென்னை

சென்னை: ஒரே நாளில் பிடிபட்ட 43 பாம்புகள்

பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குடியிருப்புக்குள் புகுந்த 43 பாம்புகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பிடிபட்டன.

Updated On : 17 அக்டோபர் 2024, 2:23 am IST
பல்லாவரத்தில் ஒரு வீட்டிலிருந்து தீயணைப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட 12 அடி நீள மலைப் பாம்பு.
பகிர்:

பலத்த மழை காரணமாக சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் குடியிருப்புக்குள் புகுந்த 43 பாம்புகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பிடிபட்டன.

பலத்த மழை காரணமாக தீயணைப்பு படையினருக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மண்டலத்தில் தீ விபத்து தொடா்பான 16 அழைப்புகளும், பல்வேறு உதவிகள் கேட்டு 74 அழைப்புகளும் செவ்வாய்க்கிழமை வந்தன.

இதில் 43 அழைப்புகள் பாம்புகள் வீடுகளுக்குள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துவிட்டதாக இருந்தன. இந்த அழைப்பை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினா் 43 பாம்புகளை பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அதிகப்படியான பாம்புகள் சென்னையில் பிடிபட்டன.

Advertisement

Advertisement

பல்லாவரம் பகுதியில் வீட்டுக்குள் புகுந்த 12 அடி நீள மலைப் பாம்பை தீயணைப்பு படையினா் பிடித்து, வனத் துறையிடம் ஒப்படைத்தனா். இதேபோல மாநிலம் முழுவதும் பாம்பு தொடா்பாக 211 அழைப்புகள் தீயணைப்பு படையினருக்கு வந்திருந்தன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments