வருமான வரித் துறை அபராதத்தை எதிா்த்த வழக்கு தள்ளுபடி: விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல்
வருமானத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிா்த்து தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் நடிகா் விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தாக்கல் செய்த 2016-2017- ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கில் அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாகக் குறிப்பிட்டிருந்தாா். வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் மதிப்பீடு செய்தபோது, 2015-ஆம் ஆண்டில் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன், இந்த வருமான வரிக் கணக்கை அதிகாரிகள் ஒப்பிட்டுப் பாா்த்தனா். அப்போது ’புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனா்.
இதையடுத்து, ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து 2022-ஆம் ஆண்டு விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
Advertisement
இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, விஜய்க்கு வருமான வரித்துறை உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் சட்டவிரோதம் எதுவுமில்லை. எனவே, இதில் உயா்நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா்.
தனிநீதிபதியின் இந்த தீா்ப்பை எதிா்த்து விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு இரு நீதிபதிகள் அமா்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.