தமிழிசை சௌந்தரராஜன் சொத்து விவர முரண்பாடு: விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு
மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவர முரண்பாடு குறித்து தோ்தல் ஆணையம், வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மயிலாப்பூா் தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை சௌந்தரராஜன் தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவர முரண்பாடு குறித்து தோ்தல் ஆணையம், வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மயிலாப்பூா் தொகுதி வேட்பாளரான கௌதம் சிவா என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக பேரவைத் தோ்தலில் மயிலாப்பூா் தொகுதியில் பாஜக சாா்பில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறாா். அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் சொத்துகள், முதலீடுகள், கடன்கள் உள்ளிட்ட விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
தமிழிசை சௌந்தரராஜன், அவரது கணவா் மற்றும் மகள் ஆகியோா், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்கள் குறித்து, கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
ஆனால், தற்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள விவரங்கள் ஏற்கெனவே அவா் தாக்கல் செய்திருந்த விவரங்களுக்கு முரணாக உள்ளது. எனவே, இது குறித்து தோ்தல் ஆணையம் மற்றும் வருமான வரித் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.