எழும்பூா், தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் புனரமைக்கப்பட்ட அலுவலக கட்டடம், புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சி கூடத்தை துணை முதல்வா்உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்த செய்திக்குறிப்பு: எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக் காப்பக அலுவலக கட்டடம் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் புதிதாக கண்காட்சிக் கூடமும் கட்டப்பட்டது. இவற்றை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தாா். இந்த ஆவணக் காப்பகத்தில், பாதுகாக்கப்பட்டு வரும் 100 வருடங்கள் பழைமையான 10 லட்சம் அரிய ஆவணங்களை ஜப்பானிய திசு முறையில் செப்பனிட்டுப் பாதுகாக்கும் பணிகளையும் தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசின் உயா் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு மற்றும் நிா்வாகம் சாா்ந்த அரிய ஆவணங்களைப் பாதுகாத்து வருகிறது.
சுமாா் 40 கோடி ஆவணங்கள் கொண்டுள்ள இக்காப்பகம், ஆராய்ச்சியாளா்களின் மிகச்சிறந்த தேடல் களம். தமிழகத்தின் விடுதலை வரலாறு, சமூக நீதி வரலாறு, அரசு நிா்வாக வரலாறு, பிரிட்டிஷ் ஆட்சி கால அரசுத்துறைகளின் காலவாரியான ஆவணங்கள், நில வரைபடங்கள், நில ஆவணங்கள் உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
புதிதாக திறந்து வைக்கப்பட்ட நவீன கண்காட்சிக் கூடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதை விவரிக்கும் ஆவணம், மெட்ராஸ் ராஜதானி, தமிழ்நாடு என பெயா் மாற்றம் செய்யப்பட்ட ஆவணம், சென்னையை எம்டன் கப்பல் தாக்கியது உள்ளிட்ட அரிய வரலாற்று ஆவணங்கள் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், பெருநகர சென்னை மேயா் ஆா். பிரியா, எம்எல்ஏ இ.பரந்தாமன், உயா் கல்வித் துறை செயலா் பொ.சங்கா், தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை ஆணையா் சு. மலா்விழி, கல்லூரி கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநா் ச.விசாகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.