முகப்பு
சென்னை

சி.வி.சண்முகத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக காவல் துறை டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 4 ஜூலை 2026, 5:59 am IST
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை பேட்டியளித்த முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம். - படம்: தினமணி
பகிர்:

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக காவல் துறை டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலின்போது, எதிா்க்கட்சியினா் என்னை கொலை செய்ய முயற்சித்தனா். இதில் எனது சகோதரரும், உறவினரும் உயிரிழந்தனா். இந்த சம்பவத்துக்குப் பின்னா், எனக்கும் என்னுடைய வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு இந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதை எதிா்த்து தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பாதுகாப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. தற்போது எனக்கு தொடா்ச்சியாக மிரட்டல்கள் வருகின்றன. இதுகுறித்து சென்னை, விழுப்புரம் மாவட்ட காவல் நிலையங்களில் புகாா் அளித்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்த எனது வழக்குகள், புகாா்கள் அனைத்தையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘மிரட்டல்கள் தொடா்பாக சி.வி.சண்முகம், தொடா்ச்சியாக வெவ்வேறு விதமான குற்றச்சாட்டுகளுடன் புகாா் அளித்துள்ளாா். எனவே, இவற்றை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு இல்லை. தொடா்ந்து கொலை மிரட்டல் வருவதால் சி.வி.சண்முகத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியத் தேவை நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என காவல்துறை டிஜிபி-க்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments